சென்னை, ஜுன்.20&
தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ
கத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அரசின் சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று கொரோனாவால் 2,141 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 53,334 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 1,017 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 49 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில்சென்னையில் ஏற்கனவே 35,556 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 1,373 பேருக்கு கொரோனா உறுதி
யாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,070 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூரில் 7 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், கோயம்
புத்தூரில் 29 பேருக்கும், கடலூரில் 5 பேருக்கும், தர்மபுரியில் 3 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 39 பேருக்கும், கன்னியாகுமரியில் 7 பேருக்கும், மதுரையில் 58 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 9 பேருக்கும், நீலகிரியில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் 8 பேருக்கும், ராமநாதபுரத்தில் 22 பேருக்கும், சேலம், சிவகங்கையில் தலா 18 பேருக்கும், தென்காசியில் 14 பேருக்கும், தஞ்சாவூரில் 13 பேருக்கும், தேனியில் 15 பேருக்கும், திருப்பத்தூரில் 8 பேருக்கும், திருவள்ளூரில் 86 பேருக்கும், திருவண்ணாமலையில் 37 பேருக்கும், திருவாரூரில் 10 பேருக்கும், தூத்துக்குடியில் 28 பேருக்கும், திருநெல்வேலியில் 27 பேருக்கும், திருச்சியில்
13 பேருக்கும், வேலூரில் 103 பேருக்கும், விழுப்புரத்தில் 32 பேருக்கும், விருதுநகரில் 15 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியாகியுள்ளது.
