சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. scabover tablet side effects இதில், 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசும்போது, ”மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. கொரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அமலில் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31. ivermectina e ibuprofeno 5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.